Kumar

Kumar

Saturday, December 17, 2016

உங்கள் ஜாதகத்தில் திருமண விதி விதிகள் அனைத்தும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானதுதான் 1. ஏழாம் வீடு களத்திர ஸ்தானமாகும். (Seventh house is called as house of marriage) 2. சுக்கிரன் களத்திரகாரகன் எனப்படுவான் (Venus is called as authority for marriage). 3. ஏழிற்குரிய கிரகத்தின் திசை புக்தியில் அல்லது சுக்கிரனின் Sub - periodல் திருமணம் நடக்கும் 4. ஏழில் குரு இருந்தால் நல்ல மனைவி கிடைப்பாள் . 5. ஏழாம் வீட்டிற்கு உரியவன் (Owner) திரிகோண வீடுகளில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றாலும் நல்ல மனைவி கிடைப்பாள். 6. ஏழில் சந்திரன் அல்லது சுக்கிரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள். இதே அமைப்பு பெண்ணாக இருந்தால் நல்ல கணவனாகக் கிடைப்பான். 7. சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் படித்த புத்திசாலியான மனைவி கிடைப்பாள் 8. சுக்கிரனுடன், சந்திரனும், புதனும் கூடி இருந்தால் ஒரு பெரிய செல்வந்தரின் மகள் மனைவியாகக் கிடைப்பாள். 9. சுக்கிரனுடன், சனி சேர்ந்திருந்தால் மிகவும் கஷ்டப்படுகிற - ஆனால் உழைப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பெண் மனைவியாகக் கிடைப்பாள். 10. ஏழாம் அதிபனுடன் எத்தனை கோள்கள் சேர்ந்திருக்கிறதோ அத்தனை பெண்களுடன் ஜாதகனுக்குத் தொடர்பு உண்டாகும். ஆனால் ஏழாம் அதிபது சுபக் கிரகமாகவோ அல்லது சுபக்கிரகத்தின் பார்வை பெற்றாலோ ஜாதகன் ஒழுக்கமுடையவனக இருப்பான். 11. லக்கினாதிபதியும், ஏழாம் அதிபதியும் சேர்ந்து ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது. 12. சுக்கிரனும், செவ்வாயும் சேர்ந்து ஏழாம் வீட்டில் அமர்ந் திருந்தால் ஜாதகன் ஒரு விதவையை மணந்து கொள்வான் 13. ஏழில் ஒன்றிற்கு மேற்பட்ட பாப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு நோய் உண்டாகும் 14. இரண்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அல்லது இரண்டாம் வீட்டைப் பாப கிரகங்கள் பார்த்தாலும் அதனதன் திசா புக்திகளில் மனைவிக்கு நோய் உண்டாகும். 15. ஏழிற்கு உடையவன் சர ராசியில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு தாரம் உண்டு. ஸ்திர ராசி என்றால் ஒரு மனைவிதான். உபயராசியென்றால் அவன் பல பெண்களுடன் தொடர்புடையவன். 16. லக்கினாதிபதி சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், அல்லது சுக்கிரனின் பார்வை பெற்றிருந்தாலும் ஜாதகன் பல பெண்களிடத்தில் விருப்பம் உடையவனாக இருப்பான். 17. ஏழில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும் சரி, செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் சரி, ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது! 18. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள், அதோடு சுக்கிரன் போன்றவர்கள் பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் மனைவி நிலைக்க மாட்டாள் 19. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி,. அவர்கள் சுக்கிரனுடன் அல்லது பாப கிரகங்களுடன் கூடி ஆறு, எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் பல பெண்களிடம் தொடர்பு ஏற்படும் 20. இரண்டாம் வீடு மற்றும் ஏழாம் வீட்டிற்கு உரியவர்கள் கேந்திர, திரிகோணங்களில் நின்றால், ஜாதகனுக்கு ஒரே மனைவி, அதோடு அவன் பிற மாதரை விரும்ப மாட்டான் இப்படி நிறைய நிறைய விஷயங்கள்

ஜாதகக் கணக்கீடுகள்                    அடிப்படை விவரம்-Basic Details நன்மை அளிப்பவைகள்-Benefic Provides தீமை அளிப்பவைகள்-Malefic Provides கிரக நிலைகள்-Planetary Position ஜாதகச் சக்கரம்-Horoscope Chart நட்சத்திராதிபதிகள்-Star Lords பாவ அட்டவணை-Bhava Chalit Table பாவச் சக்கரம்-Bhava Chalit Chart ஷோடச வர்க்க அட்டவணை-Shodash Varga Table ஷோடச வர்காதிபதிகள்-Shodash Varga Lords ஹோரை-Hora திரேக்கோணம்-Dreshkanam சதுர்த்தாம்சம்-Chaturthamsam பஞ்சாம்சம்-Panchamsam சஷ்டாம்சம்-Shashthamsam சப்தாம்சம்-Saptamsam அஷ்டாம்சம்-Ashtamsam நவாம்சம்-Navamsam தசாம்சம்-Dasamsam ருத்ராம்சம்- Rudramsam துவாதசாம்சம்-Dwadasamsam ஷோடசாம்சம்-Shodasamsam விம்சாம்சம்-Vimsamsam சதுர்விம்சாம்சம்-Chaturvimsamsam சப்தவிம்சாம்சம்-Saptavimsamsam திரிம்சாம்சம்-Trimsamsam சுவேதாம்சம்-Khavedamsam அக்ட்சவேதாம்சம்-Akshavedamsam சஷ்டியாமசம்-Shastiamsam நவாம்ச நவாம்சம்-Navamsa Navamsam அஷ்டோத்ராம்சம்-Ashtottaramsam துவாதசாம்ச துவாதசாம்சம்-Dwadasamsa Dwadasamsam கிரக நிலைகள் (மேற்கத்திய முறை)-Planetary Position (Western System) உபகிரக நிலைகள்-Sub Planetary Position உபகிரகச் சக்கரம்-Sub Planets Charts உபகிரக நட்சத்திராதிபதிகள்-Sub Planets Star Lords அஷ்டகவர்க்க அட்டவணை-Ashtavargam Table அஷ்டகவர்க்கச் சக்கரம்-Ashtavargam Chart அஷ்டகவர்க்க திரிகோண சோதனை-Ashtavargam Trikona Test அஷ்டகவர்க்க ஏகாதிபத்திய சோதனை-Ashtavargam Ekadipathyam Test பாவாதிபதிகள்-Bhava Lords கிரக சேர்க்கைகள்-Planetary Conjunction கிரகப் பார்வைகள்-Planetary Aspects சுப அசுப கிரகங்கள்-Benefic Malefic Planets கிரக நட்பு விவரங்கள்-Planets Friendship Details சஷ்டி அம்சத்தில் திரிக்பலம்-Trik Bala in Sashdi Amsam ஷட்பல அட்டவனை-Shad Bala Table ஷஷ்டி அம்சத்தில் பாவ திருக்பலம்-Bhava Trik Bala in Sashdi Amsam பாவ பல அட்டவனை-Bhava Bala Table கிரக சிறப்புகள்-Planetary Special கிரக யோகங்கள்-Planetary Yogam கிரக தோஷங்கள்-Planetary Dosham விம்சோத்தரி திசை விவரங்கள்-Vimshodhari Dasa Details கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறை

ஜாதகப் பலன்கள் நட்சத்திரப் பலன்-Star Predictions திதி, நித்திய யோகப் பலன்-Thidi and Yoga Predictions இலக்கினப் பலன்-Lagna Predictions திதி, நித்திய யோகப் பலன்-Thidi and Yoga Predictions இலக்கினப் பலன்-Lagna Predictions இராசி பலன்-Star Predictions திரேக்காணப் பலன்-Drekkana Predictions பாவாதிபதிகள் உள்ள பாவப் பலன்-Bhava Lords Predictions பாவங்களில் உள்ள கிரகப் பலன்-Planets in Bhava Predictions செல்வம் மற்றும் கல்வி நிலை-Finance and Education Predictions நிதி, முன்னேற்றம், பாக்கியம் திருமண வாழ்க்கை விம்சோத்தரி தசா புக்தி பலன்கள் சனி கோச்சாரப் பலன் இராகு, கேது கோச்சாரப் பலன் குரு கோச்சாரப் பலன் சூரியன் கோச்சாரப் பலன் அதிர்ஷ்டக் கற்கள் எ‌ண் ஜோ‌திட‌ம் லால் கிதாப் பரிகாரங்கள்

Friday, December 16, 2016

இராஜ யோகம்                                                        1. இராஜ யோகம் : கிரகங்கள் கூட்டு யோகமாகும் .யோகம் என்பது சுப/அசுப பலன்களைத் தர வல்லது .ஒருவன் பிச்சை எடுப்பதிற்கு ஒரு யோகம் (கிரக கூட்டு) வேண்டும் . இதுவும் ஒரு வகை யோகமே . இராஜ யோகம் என்பது சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவது ,அனுபவிப்பது ,பணப்புழக்கம் அதிகம் இருப்பது ,உயர் நிலையில் இருப்பது மேலும் கலெக்டர் ,பெரிய வர்த்தகம் செய்பவர் ,டாக்டர் ,எஞ்சினியர் ,உலகமறிந்த விளையாட்டு வீரர் ,விரும்பப்படுகிற சினிமா நடிகர் / நடிகை ,மதத் தலைவர் போன்றவர்களுக்கு எல்லாம் சுப பலனை தரக்கூடிய கிரக கூட்டு இருப்பதே காரணம் . இராஜ யோகங்களை தரக்கூடிய சில கிரக கூட்டுகள் பற்றி காண்போம் . 1. 5,9 ம் வீட்டு அதிபதிகளுடன் 1,4,7,10 ம் வீட்டு அதிபதிகள் சொந்த வீட்டில் அமர்வது சுப யோகம் ஆகும் . அது மேலும் லக்னமாகி சூரியன் ,சந்திரன் சேர்ந்து தங்களது சொந்த வீட்டில் அமர்வது அல்லது இருவரும் 1,4,5,9,10 ல் அமர்வது இராஜயோகம் ஆகும் .இந்த அமைவு பெற்று ஜாதகர்க்கு இராஜயோகத்துடன் இருப்பார் . 2. ரிஷபம் லக்னமாகி 9,10 ம் ஆதியாகிய சனி 5 ம் வீட்டதிபதி புதனோடு கேந்திரத்திலே ,திரிகோணத்திலே இருப்பது . 3. மிதுனம் லக்னமாகி 1,4 க்குடைய புதன் 10 ம் ஆதி குரு அல்லது 5 ம் ஆதி சுக்கிரனோடு இணைவது . 4. கடகம் லக்னமாகி சந்திரன் 5,10 ம் ஆதி செவ்வாயோடு 11,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது . 5. சிம்மம் லக்னமாகி சூரியன் 4,9 ம் ஆதி செவ்வாயோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது . 6. கன்னி லக்னமாகி 1,10 ம் ஆதி புதன் , 4,7 க்குரிய குரு அல்லது 2 , 9 க்குரிய சுக்கிரனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது . மேலும் புதன் ,சுக்கிரன் 3 ல் இணைந்து 9 ம் வீட்டைப் பார்ப்பதும் இராஜயோகமாகும். 7. துலாம் லக்னமாகி 4, 5 க்குடைய சனி, 2 ,7 க்குரிய செவ்வாய் அல்லது 9 க்குரிய புதன் அல்லது 10 க்குரிய சந்திரனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது . 8. விருச்சகம் லக்னமாகி 5 க்குரிய சந்திரன் அல்லது 10 க்குரிய சூரியனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது . 9. தனுசு லக்னமாகி 1 ,4 க்குரிய குரு 5 க்குரிய செவ்வாய் அல்லது 10 க்குரிய புதன் அல்லது 9 க்குரிய சூரியனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது . 10. மகரம் லக்னமாகி சனி 5,10 க்குரிய சுக்கிரனோடு இணைவது . 11. கும்பம் லக்னமாகி சனி 4,9 க்குரிய சுக்கிரனோடு இணைவது . 12. மீனம் லக்னமாகி 1,10 க்குரிய குரு 4,7 க்குரிய புதனோடு அல்லது 9 க்குரிய செவ்வாயோடு இணைவது மேலும் 4 வகையான இராஜயோகம் கிழ்க்கண்ட வழிவகைகளில் உருவாகிறது 1. 1,5,9 ம் ஆதிகள் இணைவது 2. 2,6,10 ம் ஆதிகள் இணைவது 3. 3,7,11 ம் ஆதிகள் இணைவது 4. 4,8,12 ம் ஆதிகள் இணைவது 1, 5, 9 : 1. இந்த வகை இணைவு ஜாதகரை சமுதாயத்தில் பெரிய மனிதராகவும் தலைவராகவும் அல்லது விஞ்ஞானி ,மகான் நிலைக்கு கொண்டு செல்லும் . 2, 6,10: 2. இவர்கள் வெளிநாடு சென்று அதிக வருவாய் ஈட்டும் நிலைக்குக் கொண்டு செல்லும் .இவர்கள் குடும்பமே பெரிய வர்த்தகர்களாகவும் ,அரசாங்கத்தால் மதிக்கப்படுபவராகவும் இருப்பார்கள் . 3, 6,11: 3. மிகவும் தைரியசாலிகளாகவும் தன் உழைப்பால் முன்னேறுபவர்களாகவும் இருப்பார்கள் . 4, 8,12: 4. இவர்கள் மறைமுக நடவடிக்கை மூலம் பொருள் ஈட்டுபவர்களாகவும்,கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவர்களாகவும் சொத்தின் மேல் பற்றுடையவர்களாகவும் இருப்பார்கள் . 2. கால சர்ப்ப யோகம் . ராகு,கேதுகளுக்கும் இடையில் அனைத்து கிரகங்களும் அமைவது .பெரும்பாலான ஜோதிடர்கள் இந்த அமைவு கெடு பலனைத் தரும் என்று கூறுகிறார்கள் .ஆனால் இது அப்படியல்ல .இவ்வமைப்பு உள்ளவர்கள் இயற்கையிலேயே தைரியசாலிகளாகவும் ,தன்னை வெளிக்கொணர்வதில் ,நிலை நாட்டுவதில் குறிக்கோள் உடையவர்களாகவும் ,மிக விரைவில் பிரபலம் அடைபவர்களாகவும் இருப்பவர்கள் .குறிப்பாக 10 ம் அதிபதி ரகுவுடன் தொடர்பு அல்லது ராகு 3 அல்லது 5 ல் அமைவது இத்தகைய யோகத்தைத் கண்டிப்பாக கொடுக்கும் . 3. திருமணப் பொருத்ததில் சில நுணுக்கங்கள் . ஒரு ஆணின் ஜாதகமும் ,பல பெண்களின் ஜாதகமும் ஒரே நேரத்தில் பொருத்தம் பார்க்க வந்தால் எப்படிப் பொருத்தம் பார்ப்பது ? 1. ஆணின் ஜாதகத்தில் 10 மிடம் அல்லது 10 ம் அதிபதி அமர்ந்த இராசி எதுவோ அதுவே அவர் மனைவின் ராசியாகும் . உதாரணமாக ஒரு சிம்ம லக்னம் ஆணிற்கு 10 மிடம் ரிஷபம் .அந்த சுக்கிரன் கடகத்தில் .இந்த அமைப்பில் உள்ள ஒரு வரனுக்கு 50 பெண்களின் ஜாதகம் பொருத்தம் பார்க்க வருமானால் அந்த 50 ஜாதகங்களில் ரிஷபம்,கடகம் ,துலாம் இந்த ராசியுடைய பெண்களின் ஜாதகம் மட்டும் எடுத்து பொருத்தம் பார்ப்பது நலம் . 2. மற்றொரு வகை .வரணின் ஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி அல்லது அந்த ராகுக்கு இடம் கொடுத்தவர் அமர்ந்த ராசி எதுவோ அது பெண்ணின் ராசியாக இருக்கும் . 3. ஆணின் ஜாதகத்தில் உள்ள ராகு ,கேதுகளுக்கு ,1,5,9, ல் பெண்ணின் ராகு ,கேதுவோ அல்லது கேது,ராகுவோ அமைந்து இருக்கும் ஜாதகம் பொருந்தும் .

1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்: நவகிரஹங்களிலேயே மிகச் சிறந்த சுபக்ரஹமான குரு பகவான் உங்கள் லக்னத்தில் இடம் பெற்றுள்ளார். இதைவிடப் பெரிய அதிர்ஷ்டம் வேறு என்ன வேண்டும். தந்தையின் உதவிலோ கீழ்ப்படியும் அரிய குழந்தைகள் பாக்கியத்திலோ பொதுவாக எல்லா விஷயங்களிலுமே நன்மையையே அடைவீர்கள். சிறந்த புத்திமான். உயர்ந்த படிப்பாளி. ஆரோக்கியமானவர். அழகிய உருவம் படைத்தவர்.

ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?       ஜோதிட நூல்கள் சிலவற்றில் புதனும், சந்திரனும் லக்னத்தில் ஒன்றாக இருந்தால் அந்தப் பெண் அனைத்து கலைகளும் அறிந்தவளாக இருப்பாள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதி அனைத்து பெண்களுக்கும் பொருந்துமா? பதில்: பொதுவாகவே லக்னத்தில் புதனும், சந்திரனும் ஒன்றாக இருப்பது நல்ல அமைப்புதான். இதுபோன்ற அமைப்பைப் பெற்றவர்கள் பல கலைகளிலும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் என �சந்திர காவியம்� என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், மகரம் ஆகிய வீடுகளில் புதனும், சந்திரனும் ஒன்றாக இருந்தாலும் மேற்கூறிய பலன்கள் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. விருச்சிகத்தில் சந்திரன், புதன் சேர்க்கை பலனளிக்காது. மீனத்தில் சந்திரன்+புதன் இருந்து சுபகிரகப் பார்வை (குரு) இல்லாவிட்டால் கல்வி தடைபடும். மேலும் சந்திரனும், புதனும் கிரக யுத்தம் (5 பாகைக்குள் இருக்கக் கூடாது) செய்யாமல் இருக்க வேண்டும். ஒருவேளை சந்திரனும், புதனும் 5 பாகைக்குள் இருந்தால் அந்த ஜாதகர் பலவற்றை தெரிந்து வைத்திருந்தாலும், அதனால் அவருக்கு எந்தப் பலனும் இருக்காது என்றும் சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் சந்திரன், புதன் சேர்க்கையை சனி பார்த்தாலும் பலன் கிடைக்காது.

ஒரே நேரத்தில் பிறக்கும் பல குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான ஜாதக அமைப்பு காணப்படுமா?                                       உலகில்ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பிறந்தாலும் அவற்றிற்கு ஒரே மாதிரியான ஜாதக அமைப்புகள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் நவாம்சம், தசாம்சத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். இதேபோல் அந்தக் குழந்தைகளின் கைரேகையைக் கொண்டும் மிகத் துல்லியமான மாற்றங்களை கண்டறியலாம். சில நொடி இடைவெளியில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளுக்கு கூட ஜாதகத்திலும், கைரேகையிலும் வித்தியாசம் இருக்கும். ஜோதிட ரீதியாகப் பலன் சொல்வதற்கு முன்பாக ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை மட்டுமல்ல, இடத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என பண்டைய ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் பல குழந்தைகள் பிறந்தாலும் அவர்களின் ஜாதக அமைப்பில் மாற்றம் இருக்கும் என்பது ஜோதிட விதி. அட்ச ரேகை, தீர்க்க ரேகை போன்றவை ஜாதகம் கணிப்பதற்கு மிக முக்கியமாகும். உதாரணமாக வெவ்வேறு தம்பதிகளுக்கு ஒரே நேரத்தில் பிறக்கும் குழந்தைகளில் ஒன்று மருத்துவமனையிலும், மற்றொன்று வீட்டிலும், 3வது குழந்தை வயல்/தோட்டப் பகுதியிலும் பிறக்கின்றன என வைத்துக் கொண்டால், அந்தக் குழந்தைகள் வெவ்வேறு கிரகங்களின் ஆளுமைக்கு உட்படுகின்றன. இதில் மருத்துவமனை செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் வருவதால் அங்கு பிறந்த குழந்தைக்கு செவ்வாயின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும். அடுத்ததாக சுக்கிரனின் ஆதிக்கத்திற்குள் குடியிருப்புகள் வருவதால் அங்கு பிறக்கும் குழந்தைக்கு சுக்கிரன் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும். மூன்றாவதாக வயல்/தோட்டம் உள்ளிட்ட கரடு முரடான பகுதிகள் சனியின் கட்டுப்பாட்டில் வருவதால், அங்கு பிறக்கும் குழந்தைக்கு சனியின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும். இதே போல் பிரயாணத்தின் போது பிறக்கும் குழந்தைகளுக்கு ராகு/கேதுவின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். ஒரே நேரத்தில் பிறந்தாலும், கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு அவர்களின் வாழ்க்கையில் மாறுதல்கள் காணப்படும். இங்கே மற்றொரு விடயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். எந்த ராசிகள் (பெற்றோர்) சேர்ந்து இந்த (குழந்தை) ராசி உருவானது என்பதையும் கணிக்க வேண்டும். உதாரணமாக மேஷம், ரிஷபம் சேர்ந்த கடகம் பிறந்திருக்கிறதா அல்லது மிதுனம், சிம்மம் சேர்ந்து கடகம் வந்ததா என்பதையும் கருத்தில் கொண்டால் ஒரே நேரத்தில் பிறந்த ஜாதகர்களிடம் உள்ள மாற்றத்தை கணிக்க முடியும்.